வலுவான அணிக்கு எதிரான போட்டியில் தவறுகள் அனுமதிக்கப்பட முடியாது என பாகிஸ்தான் அணித்தலைவர் அப்ரிடி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டியில் 130 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை கடந்து 7 விக்கெட்களால் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.
இப்போட்டியின் பின்னரான செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அப்ரிடி, ‘ இவ்வாறான போட்டிகளின் போது சிறிது நேரமும் ஓய்வெடுக்க முடியாது என்பதை இன்றைய போட்டி உணர்த்தியுள்ளது. வீரர்கள் அறையில் ஓய்வு எடுக்க முடியாது. இன்றைய போட்டியின் போதும் நாம் சிறிய தவறுகளை செய்துள்ளோம். ஆனால் இவ்வாறான தவறுகள் வலுவான அணி ஒன்றுடனான போட்டியில் அனுமதிக்கப்பட முடியாது’ என தெரிவித்துள்ளார்.
பங்களாதேஷில் நடைபெற்றுவரும் ஆசிய கிண்ண கிரிக்கட் தொடரில் தனது முதலாவது போட்டியில் இந்தியாவை எதிர்கொண்ட பாகிஸ்தான் 5 விக்கெட்களால் தோல்வியடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !