Headlines News :
Home » » சவூதியில் மதம் கடந்த மனிதநேயம்! சவூதியில் உதவிய நல்லுள்ளங்கள்!

சவூதியில் மதம் கடந்த மனிதநேயம்! சவூதியில் உதவிய நல்லுள்ளங்கள்!

Written By We Are Anonymous on Tuesday, March 1, 2016 | 10:42:00 PM



ரியாத்: கன்னியாகுமரி மாவட்டத்தின் மேல்மிடாலம் பகுதியை சார்ந்த ஜெய சேகரன் என்ற சேகர் சவுதி அரேபியாவில் பணியாற்றியபடி ஷீலாரஞ்சனி(மனைவி) ஆஷா பிரியதர்ஷினி(மகள்) ஆகியோரோடு குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 8 மாதமாக உடல்நிலை சரியில்லாமல் மிகவும் சிரமப்பட்டு வந்த அவருக்கு அங்குள்ள சமூக நல அமைப்பான‌ இந்தியன் சோஷியல் ஃபோரம் சமூக நலத்துறை பொறுப்பாளர் ராஜா முஹம்மது மற்றும் நிர்வாகிகள் சந்தித்து பல்வேறு உதவிகளை செய்து வந்த நிலையில் கடந்த 17:2:2016 அன்று ஜெய சேகரன் மரணமடைந்தார்.

கணவரை பறி கொடுத்து திக்கற்று நின்ற அவரது மனைவி ஷீலாரஞ்சனி இந்தியன் சோஷியல் ஃபோரம் நிர்வாகிகளை அணுகி தனது கணவரின் உடலையும் தங்களையும் தாயகம் அனுப்பி வைக்க உதவுமாறு கோரிக்கை வைத்தார். இறந்தவரின் உடலையும் அவரது குடும்பத்தையும் தாயகம் அனுப்பி வைக்க சமூக நல அமைப்பின் நிர்வாகிகள் கடும் முயற்சி மேற்கொண்டனர். தொடர் முயற்சியின் பலனாக 29-2-2016 அன்று இறந்த ஜெய சேகரனின் உடலையும் அவரின் குடும்பத்தினரையும் ரியாத் விமான நிலையத்திலிருந்து திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

இந்த தகவலை கன்னியாகுமரியின் உள்ளவர்களுக்கு தகவல் தெரிவித்ததின் அடிப்படையில் நேற்று காலை திருவனந்தபுரம் விமான நிலையம் சென்று SDPI கட்சியின் மாவட்டதலைவர் சுல்ஃபிகர் அலி உடலை பெற்றுகொண்டார். பின்னர் திருவனந்தபுரம் SDPI கட்சியின் ஆம்புலன்சை வரவழைத்து உடலை சம்பந்தபட்ட குடும்பத்தினரிடம் ஒப்படைத்தார். இவர்களுக்கு உதவியாக‌ மாவட்ட செயலாளர் ஜாஹிர்ஹுசைன் திருவிதாங்கோடு நகர தலைவர் ஜாஃபர் SDTU மாவட்ட தலைவர் மணவை சாதிக் ஆகியோர் செயல்பட்டனர்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

Design Your Website

Design Your Website

செய்திகளை அனுப்ப

செய்திகளை அனுப்ப

Recent Post

Comments

 
Support : Website | Mohamed Hasni | Mohamed Solution
Website | Mohamed Hasni | Mohamed Solution
Copyright © 2016. my New Desi - All Rights Reserved