ஹோமாகம நீதிமன்ற வளாகத்தில் குழப்பநிலையை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 6 பிக்குகள், ஒரு பெண் உட்பட 11 பேரையும் மஹரகம நீதவான் நீதிமன்ற நீதவான் இன்று பிணையில் விடுதலை செய்துள்ளார்.
சந்தேகநபர்களை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய வேளை, 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவித்து ஹோமாகம நீதவான் ரங்க திஸாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.
ராவணா பலய அமைப்பின் அமைப்பாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர், முன்னாள் எம்.பியான ஹக்மீமன தயாரத்ன தேரர்கள் உள்ளிட்டோர், கடந்த 15ஆம் திகதி பொலிஸில் சரணடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !