சோதனைகளை எதிர்கொள்வது எப்படி? என்ற தலைப்பில் சேக் அப்துல் பாசித் புகாரி அவர்களின் உரையின் சில கருத்துக்கள்.
ஆங்காங்கே அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை அல்லாஹ் கேட்க மாட்டானா?
இந்த உலகில் எது நடந்தாலும் அல்லாஹ்வின் அறிவின்றி நடக்காது!
அவன் அனைத்தையும் படைத்தைவன் ஞானம் மிக்கவன், அருளாளன்!
அவன் நம்மை சோதிப்பான்! கேள்வி கேட்பான் – அவனிடம் யாரும் கேள்வி கேட்க முடியாது!
இந்த உலகம் சோதனக் களம்! அவன் நல்லவர்களைப் பிரித்தெடுப்பான்
இறுதியில் மறுமையில் வெற்றியாளர்களுக்கு சுவர்க்கத்தை பரிசாகக் கொடுப்பான்.
அந்த சுவர்க்கத்திற்கு உரியவர்கள் – நபிமார்கள் – ஸகாபாக்கள் – மற்றும் நேர்வழி பெற்றவர்கள்
அவர்கள் பல வகையான சோதனைகளில் பொறுமையுடன் வாழ்ந்து வெற்றி பெற்றவர்கள்
அல்லாஹ்வின் பாதையில் தங்களது உயிரையும் தியாகம் செய்தவர்கள்.
சோதனயில் அல்லாஹ்வின் ஞானம் உள்ளது!
நமது வேண்டல்களைக் கேட்கின்றான்.. சில காலம் எல்லாவற்றிற்கும் அவகாசம் கொடுக்கின்றான்..
இறுதியில் நிச்சயம் நேர்வழியில் செலவர்களுக்கு வெற்றி!
அப்பாவி முஸ்லிம்கள் காசா பகுதியில் யுதர்களால் கொல்லப்படுகின்றார்கள்.
உண்மையான முஸ்லிம்கள் தன் உடன்பிறப்பாகக் கருதி துடிக்க வேண்டும்.
முஸ்லிம்கள் அனைவர்களும் உடன்பிறப்புகள்..
மேலும் அறிய - வெப்சைட்டில் சென்று முழுமையாக வீடியோவைக் கவணிக்கவும்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !